Sunday, October 19, 2014

நோய்களும் ஜோதிடமும்

நோய்களும் ஜோதிடமும்


பாவங்கள் குறிப்பிடும் உடற்பாகங்கள் மற்றும் நோய்
 
லக்ன பாவம்:ஒருவரது உயரம்தோற்றம்பருமன் இவற்றைக் குறிப்பதாகும்சிறப்பாக,தலைமூளைரோமம்தோலைக்குறிக்கும்நிறத்தின் தன்யைக் குறிக்கும்.லக்னத்தில் இருக்கும் கிரகம்பார்க்கும் கிரகத்திற்கேற்ப அவரது நிறம்அமையும்.ஆயுள் – நோய் எதிர்ப்புச் சக்தி – அல்லது இறுதி வரை ஏதாவது ஒருவியாதியால் துன்பப்படும் நிலை சக்தி – நோய் தாங்கும் சக்தி உடல் உறுதிவியாதியிலிருந்து விடுபடும் நிலை – நோய் குணமாகும் நிலை.

2ம் பாவம்:முகம்கண்கள்பற்கள்தொண்டைமூக்குகுரலின் தன்மை இவற்றைக்குறிக்கும்.இளமைக் காலத்தில் ஏற்படும் நோய்கள்அவற்றால் ஏற்படும் பாதிப்பு

3ம் பாவம்:காதுகள்கழுத்துதோள்பட்டைகைகள்மூச்சுக் குழுய்அதில் ஏற்படும்அழற்சிகுரல் வளைகுரல் வளை அழற்றி.நோய் எதிர்ப்பு சக்தி பெறும் தகுதி – நோயைத் தாங்கும் தைரியம்உடலில்ஏற்படும் சக்தி இரத்தத்தின் தன்மைமுதலியன

4ம் பாவம்:மார்பகம்நுரையீரல்உணவுக் குழாய்.குடும்பத்தில் வரும் பரம்பரை நோய்உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும்நோய் மன வருத்தத்தால் ஏற்படும் பாதிப்பு

5ம் பாவம்:இருதயம்ஈரல்மண்ணீரல்கணையம்சிறுகுடல் பகுதிபித்தப்பை.பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பாதிப்புஉணர்ச்சிகளால் ஏற்படும்பாதிப்பு

6ம் பாவம்:கிட்னிகுடல் பகுதி.வியாதிகளைக் குறிப்பிடும் இடம்விபத்துக்களால் ஏற்படும் பாதிப்பு,அதனால் ஏற்படும் காயம்துன்பம் முதலியன

7ம் பாவம்:கர்ப்பப் பைகர்ப்ப பைக்குச் செல்லும் குழாய் (ஃபெலோபியன் டியூப்), கருமுட்டை மலக்குடல்அடி வயிறு.உடல் உறவால் ஏற்படும் வியாதிகள்.

8ம் பாவம்:வெளிப்புற ஜெனன உறுப்புக்கள்ஆசனவாய் (மலத்துவாரம்).தீராத வியாதிகள் கண்டு பிடிக்க இயலாத வியாதிகள்அவற்றால் ஏற்படும்துன்பம்இழப்பு

9ம் பாவம்:இடுப்புதொடைப்பகுதி.இறையருளால் பெறும் உடல் நலம்.

10ம் பாவம்:முழங்கால் மூட்டுப்பகுதி.உடலின் சக்திசெயல் திறன்செயலாற்றும் தகுதிக்கானச் சக்தி பெறும் நிலை

11ம் பாவம்:கால்கண்.வியாதிகளிலிருந்து விடுபடும் நிலைநோய் குணமாகுமாஎன்பதையும்தெரிவிக்கும் பாவம்

12ம் பாவம்:பாதம்கண்.மருத்துவ மனையில் இருக்கும் நிலைகுடும்பத்தை விட்டு தனித்திருக்கும்நிலை தொற்று நோய் பாதிப்பால் தனி விடுதியில்மருத்துவ மனையில்தனிப்பகுதியில் இருக்கும் நிலை




ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.

No comments:

Post a Comment