Wednesday, December 10, 2014

புலிப்பாணி ஜோதிடம் - சூரிய மகாதிசை

புலிப்பாணி ஜோதிடம் - சூரிய மகாதிசை





சூரிய மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்

கதிரோன் என்றழைக்கப்படும் சூரிய மகாதிசை வருடம் 6 ஆகும்இதில் சூரியபகவானின் பொசிப்பு நாள் 108 ஆகும்இக்கால கட்டத்தில் இவரது திசைநடக்கும் ஜாதகனுக்கு நெருப்பினால் பீடை ஏற்படும்உறவினர் பகையாகும்.அபமிருந்து தோடம் ஏற்படும்வெகுவான பொருட்சேதம் நிகழும்.தந்தையாருக்கு அரிஷ்டம் ஏற்படுவதுடன் கண்ணோய் ஏற்படுதலும் ஜுரஉபாதை நேருதலும் ஏற்படும்கொடுமையான நாள்களாக இருக்கும் என்றுபோகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சூரிய மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்

இச்சூரிய மகாதிசையில் சந்திரனின் பொசிப்புக்காலம் 6 மாத காலங்களாகும்.இக்காலகட்டத்தில் ஏற்படக்கூடிய பலனைச் சொல்கிறேன்கேட்பாயாக!கெடுதலே இல்லாத தனலாபம் வாய்ந்து சொத்து சேர்க்கை மிகும்.நோயுபாதை இருப்புன் அவை நீங்கித் தேகமானது நலம்பெறும்அரசர்களால்பெருமையும் பாராட்டும் பரிசும் வந்தடைவதால் வெகுவானமகிழ்ச்சியுண்டாம்எனவெ இரவி திசையில் சந்திர புத்தி சிறப்பான நாள்களேஎன்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சூரிய மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

மேலும் இச்சூரிய மகாதிசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் 126நாள்களாகும்இக்காலகட்டத்தில் இச்சாதகனுக்கு ஏற்படும் பலன்களாவன:பிறரால் புகழப் பெறும் தோரணை நேரும்சொல்லுதற்குரிய நல்ல பூமிவாய்த்தலும்தனலாபம் ஏற்படலும்செல்வச் செழிப்பும் கன்று காலிகளும்பொருட் சேர்க்கையும் ஏற்படும்விளைச்சல் பெருகி அதனால் நற்பொருட்சேர்க்கையும் சுபகாரியங்களும் மனையில் நிகழும்நவதானிய விளைவுமிகுதலால் அரச செல்வம் பெற்றவன் என்று பிறர் போற்றும் பெருமையும்புகழும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

இன்னும் இச்சூரிய மகாதிசையில் கரும்பாம்பு எனக் கூறப்படும் இராகுவின்பொசிப்புக் காலம் மிக ஆகாத தொன்றேயாகும்இவனது பொசிப்புக் காலம்பத்து மாதம் இருபத்தி நான்கு நாள்களாகும்இக்காலகட்டத்தில் ஏற்படும்பலன்களாவனபொன் பொருள் சேதமாகும்பெண்நாசமும் உண்டாகும்.சத்துருக்களுடன் சண்டையிடுதல் போன்ற தீயன நிகழும்உடல் நலத்தைப்பீடிக்கும்கொடிய வியாதிகள் வந்தடையும்மனைவி மக்களைப் பிரிந்துவாழச் செய்யும்இவனது பொசிப்புக் காலத்தை நலமில்லாத நாள்களே என்றுதுணிந்து சொல்லுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

சூரிய மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

மேலும் இந்த இரவி திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 288நாள்களாகும்நன்மை தரும் இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன;விவரமுடன் நன்மைதரத் தக்க சம்பத்து ஏற்படின் சில சிறு சுபவிரங்களும்ஏற்பட்டு தனஹானியுண்டாகும்என்சொல் என்றும் தவறாதுதீவினைகள்அகலும்மிகவும் குறைவற்ற இன்பம் ஏற்பட்டு சுக செளக்யத்துடன் வாழும்நிலை ஏற்படும்இதுவரை ஏற்பட்டிருந்த சத்துருக்களும் இச்சாதகனைவணங்கி மித்துருவாகிச் சுகிப்பன் என்று போகர் அருளால் புலிப்பாணிகூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசைசனி புத்திப் பலன்கள்

வணங்குவதற்குரிய இரவியின் திசையில் இவனது மகனான சனிபகவானின்பொசிப்புக்காலம் பதினொரு மாதம் பன்னிரெண்டு நாள்களாகும்.இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவனமனம் வேறுபட்டசத்துருக்களாலும் அரச பீடையாலும் பெருந் தனக்கேடு ஏற்படும்அதேபோல்பிதுர் மரணமும் எதிர்பாராவண்ணம் ஏற்படும்.கெடுதியான பலன் களையேசனிபகவான் ஏற்படுத்திவைப்பார் என்று கூறுக என போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

தானென்று கூறத்தகும் சூரிய மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக்காலம் மிகவும் பாதகமானதேஇது பத்து மாதம் ஆறு நாள்கள் நிகழும்.இக்கால கட்டத்தில் ஏற்படும் பலன்களாவனதீராத வியாதி வந்து தேகநலத்தைக் கெடுக்கும் வானளாவிய சிறந்த செல்வமும் பொருளும் சேதம்அடையும்இதுவரை நன்மைகளையே அளித்து வந்த புத்தியானதுநாசமாகும்அரசனைப் போல் வாழ்ந்த இச்சாதகனின் குடும்பத்தைநாசமடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசைகேது புத்திப் பலன்கள்

இன்னுமொன்று இந்த இரவியின் திசையில் செம்பாம்பு என்று கூறப்படும்கேதுபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பொல்லாத நாள்களேயாகும்.அதுவும் 125 நாள்களேயாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன:காரியக்கேடு ஏற்படும்மனைவி நாசத்தை ஏற்படுத்தும்கேடு செய்யும்சத்துருக்களிடம் சென்று சரணடையச் செய்யும்இருந்தமனை ஊர்விட்டுஓடிவிடச் செய்யும்பூமியில் பலவிதமான தெண்டங்களை அடையச்செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்

மேலுமொன்று இந்த இரவியின் திசையில் சுக்கிரபுத்தி 1 வருட காலமாகும்.இச்சுக்கிர பகவானின் பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன:சுக்கிரனது பகைவன் சூரியனாதலால் சூத்திர மிக்க வாய்வு உபாதை ஏற்பட்டுதிரேக நலத்தைக் கெடுக்கும்பகைமைகளை உண்டாக்கும்நற்பலன்கள்வாய்த்தல் ஏற்படாதுமனைவிக்குப் பலவித அரிஷ்டங்களை உண்டாக்கும்.திரண்ட பொருட் சேதம் எற்படும்நற்பலன்கள் விளையாது என்றுகூறுவாயாக எனப் போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment