Wednesday, December 10, 2014

இராகு மகாதிசை

இராகு மகாதிசை



இராகு மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

சிறப்பு மிக்க இராகு மகாதிசையானது 18 ஆண்டுகளாகும்இதில் இராகுவின்பொசிப்புக் காலம் அதாவது சுயபுத்தியானது 2 வருடம் 8 மாதம் 12நாள்களாகும்இக்காலகட்டத்தில் சத்துருக்களால் தொல்லைகளும்நிபந்தனையோடும் எண்ணமுள்ளவனாய் மனைவி இருப்பது கண்டு மனம்வெதும்புதலும்குடியிருக்கும் மனைபாழாதலும் மூதாதையர் சேர்த்துவைத்த பழைமையான கலைப்பொருள்களும் தம் பொருளும் சேதமாகிவிரயம் காட்டும்அதுமட்டுமல்லாமல் பலமான பிணியுண்டாகி உயிர்க்குக்கேடு செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



இராகு மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

இவ்விராகு திசையில் வியாழ புத்திற்குரிய காலம் 2 வருடம் 4 மாதம் 24நாள்களாகும்இக்காலத்தில் இச்சாதகனுக்கு அரசரால் நன்மையுண்டாகும்.பெண்களால் சுபசோபனங்கள் ஏற்படுதலும் புத்திரோற்பத்தியும் ஏற்படும்.அதனால் மனத்தில் தெம்பும் மகிழ்ச்சியும் மிகுந்து காணும்பலவிதமானபாக்கியங்கள் ஏற்படுவதோடு சமுதாயத்தில் அந்தஸ்து மிகுதலும்,வெகுதனம் வாய்த்தலும் பூமி லாபமும் உண்டாகும் என்று போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


இராகு மகாதிசைசனி புத்திப் பலன்கள்

இராகு மகாதிசையில் சனிபுத்தியின் காலம் 2 வருடம் 10 மாதம் 6நாள்களாகும்இக்காலகட்டத்தில் இச்சாதகன் நன்மை இல்லாதவனாகப்பிரமை பிடித்தவனைப் போல் பலதேசமும் சென்று திரிவான்பூர்வபுண்யவசத்தால் பிதுர்களினால் பீடை ஏற்படும்கொடிபோலும் இடை யுடையமனைவிக்கு நோய் உண்டாதலும் குழந்தை மரணமும் உண்டாகும்.குலதெய்வத்தால் இடைஞ்சல் ஏற்படும்பலவகையில் விரயங்கள் ஏற்படும்.சத்துருக்களின் தொகைமிகுவதே போல வெகு தனலாபமும் என்று போகர்அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


இராகு மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

மேலும் இவ்விராகு திசையில் புதனது புத்தி 2 வருடம் 5 மாதம் 18நாள்களாகும்அக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன்கேட்பாயாகபின்னமில்லா வகையில் வாணிபமும் செய்தொழிலும்செழிக்கும்சகோதரர்களுடன் மனமொன்றி வாழ்தலும் நேரும்பிறருடன்சிற்சில மனபோதங்கள் ஏற்படினும் தனலாபமும் பூமி லாபமும்மேலோங்கிப் பெருத்தலோடு புத்திரரால் புகழும் பெருமையும் மிகும் என்றுபோகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



இராகு மகாதிசைகேது புத்திப் பலன்கள்


இனிஇராகு திசையில் கேதுபகவானின் புத்தி ஒரு வருடம் பதினெட்டுநாள்களாகும்இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவனஎவ்விடத்திலும்விரோதம் ஏற்படுதலும் அதனால் பகைவர்கள் பெருகிக் காணலும் நேரும்.உடல்நலத்தைப் பொறுத்தவரை கேட்டினையே செய்தலும் ஏவல்பில்லிமுதலியவற்றால் திரண்ட திரவியங்கள் சேதமாதலும் தேகத்தில்தீராப்பிணிக்குரிய அடையாளங்களும் காணும் எனப் போகர் அருளால்புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



இராகு மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்

இராகு திசையில் சுக்கிர பகவான் பொசிப்புக் காலம் 3 வருடங்களாகும்.இக்காலத்தில் சாதகனுக்கு நிகழும் பலன்களாவனமயில் போலும்சாயலையுடைய பெண்களால் இன்பம் விளையும்பூமி லாபம் ஏற்படுதலும்நிறைவான பொருட் சேர்க்கையும் புகழ்மிக்க அரசர்களால் சுபசந்தோஷங்களும் ஏற்படும்எனினும் வியாதி பீடிப்பதும் அதன் காரணமாகக்காரியக்கேடு ஏற்படுதலும்அரசனால் கலகம் விளையும் என்றும் போகர்அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


இராகு மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்


இவ்விராகு திசையில் சூரிய பகவானின் பொசிப்புக் காலம் கருணை தராதகாலமேஇக்காலம் 10 மாதம் 24 நாள்களாகும்தீய சத்துரு ஏற்படுதலும்,உடல் நலத்தைக் கெடுக்கும் வியாதி நேர்தலும் அதனால் பெரும் பொருள்செலவும் பூமி முதலிய விரயமுமாகும்ஒவ்வொரு நாளும்சண்டையிடுதலாலே சாவு நேர்தலும் பெருமை மிக்க பூமி அழிதலும் கன்றுகாலிகள் மாய்தலும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


இராகு மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்

இராகு பகவானின் திசையில் சிறப்புத்தராத சந்திர பகவானின் பொசிப்புக்காலம் 1 வருடம் 6 மாதங்களாகும்இக்கால கட்டத்தில் விளையும்பலன்களாவனஇன்னவிதம் என்று சொல்ல இயலாத வகையில் இதம்அறிந்து நடந்திடாத மனைவியால் பெரும் பொருட் சேதமும்இராமகாதையில் வரும் வாலியினைப் போல இச் சாதகன் மாண்டுபோதலும் உண்டுசுய தேசத்தைவிட்டு பரதேசத்தில் அலைந்து திரிதலும்மனைவியால் நற்சுகம் அடைதலும் இல்லாது போகும்மேலும் மக்களால்தான் அடைந்த பிற செல்வங்களாலும் கன்று காலிகளாலும் கேடேவிளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


இராகு மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

இனிஇவ்விராகு திசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் கேடுதருவதே.அதுவும் 1 வருடம் 18 நாள்களாகும்இக்கால கட்டத்தில் நன்மை நேராது.அப்பலன்களாவனஅக்கினியாலும்திருடர்களாலும் வெகுபயம் உண்டாகும்.குலதெய்வத்தின் சாபத்தால் மிகுந்த அவதி உண்டாகும்பாவையரால்ஏற்படும் பல தீங்குகளால் வெகுதன விரயம் ஏற்படும்பலவகையிலும்பொருட் செலவு உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் இராகு மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

1 comment:

  1. Okay then...

    This may sound really creepy, maybe even a little "out there..."

    BUT what if you could simply press "PLAY" and listen to a short, "magical tone"...

    And INSTANTLY attract MORE MONEY into your life?

    And I'm talking about thousands... even MILLIONS of DOLLARS!!!

    Do you think it's too EASY? Think it couldn't possibly be REAL?

    Well, I've got news for you.

    Many times the most significant miracles in life are the EASIEST!!!

    In fact, I'm going to PROVE it to you by letting you PLAY a real-life "miracle wealth building tone" I developed...

    And TOTALLY FOR FREE

    YOU simply hit "PLAY" and you will start having more money come into your life. it starts right away.

    CLICK here now to experience this marvelous "Miracle Money Tone" - it's my gift to you!!!

    ReplyDelete