Wednesday, December 10, 2014

வியாழன் மகாதிசை

வியாழன் மகாதிசை



வியாழன் மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்
தன்னிரகற்ற வியாழ பகவானின் திசா காலம் வருடம் 16 ஆகும்அதில்அவரது புத்தி 2 வருடம் 1 மாதம் 18 நாள்களாகும்நன்மை தரத்தக்க வகையில்அவர் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன்கேட்பாயாகஓர் அரசனைப்போல் மகிழ்வுடன் வாழும் வசதியான வாழ்வு நேரும்குருவினுடையஅருளும் வாய்க்கும்.குறைவில்லா வகையில் திரவியங்கள் வந்து சேர்தலும்நிறைந்த லாபம் வந்தடைவதோடு மனைவியால் மனமகிழ்ச்சி யுண்டாதலும்மங்களகரமான சுப சோபனம் நேர்தலும் இல்லத்தில் திருமணகாரியங்கள்நிகழ்தலும் நேரும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப்பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசைசனி புத்திப் பலன்கள்

வியாழ மகாதிசையில் சனிபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம்12 நாள்களாகும்கொடைத் தன்மை மிகு சனிபகவான்அக்காலத்தில்நிகழ்த்தும் பலன்களாவனபுத்திரோற்பத்தி ஏற்படுதலும் இன்பம் நேர்தலும்,எண்ணிய எண்ணங்கள் எண்ணிய வண்ணம் ஈடேறுதலும் நேரும்வெகுதிரவியமும் பொன்னாபரணம் புத்தாடை சேர்க்கையும் ஏற்படும்.எழுச்சிபெறும் அரசனைப் போல் சம்பத்தும் கனக தண்டிகையும்வாகனாதிகளும் ஏற்பட்டு வெகு பிரபலனாவான் என்று போகர் அருளால்புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

வியாழ மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 3 மாதம் 6நாள்களாகும்அக்காலகட்டத்தில் ஏற்படும் பலாபலன்களாவன:மலைபோலச் செல்வமானது பெருகிக் காணும்குறைவில்லாதமனைவியுடனும் குழந்தைகளுடனும் கட்டுக்கோப்பான நல்வாழ்வினைச்சாதகன் பெறுவான்வெகுதனமும்பெரும் புகழும் கொண்டு அரச சம்பத்தும்பட்டம் பதவிகளும் பெறுவதோடு இவனது மனைவியில் திருமகள் நிலைகொண்டு உறைவாள் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசைகேது புத்திப் பலன்கள்
வியாழ மகாதிசையில் கேது பகவானின் பொசிப்புக் காலம் தீது 11 மாதம் 6நாள்களாகும்இன்பம் நல்காத அக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக்கேட்பாயாககொடிய வியாதியினால் மரணமடைதலும்இதமாக நடந்துகொள்ளத் தெரியாத மனைவியினால் மனமுறிந்து பிரிந்து செல்வதும்நேரிடும்பகைவர்களும் பலவிதத்தில் சேதம் விளைவிக்க வந்துசேர்வார்கள்சகல ஜனங்களால் கிடைத்த அனைத்து பாக்கியமும் ஒருகணத்தில் மறைந்து போம் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்
வியாழ மகாதிசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 8மாதங்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனமனையில்அருளே உருவான திருமகள் தானே விரும்பி வந்து உறைவாள்.சுபசோபனங்கள் ஏற்படும்மனமகிழ்ச்சியுண்டாகும்சுகம் தரக்கூடியகன்னிகையுடன் இன்பமாக வாழ்வான்நாடு நகரங்கள் தனதெனக்கைவசமாகும்இந்நிலவுலகில் நன்மை மிகுந்து புகழுடன் வாழ்வான் எனபோகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்
வியாழமகாதிசையில் சூர்யபகவானின் பொசிப்புக் காலம் 9 மாதம் 18நாள்களாகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன்,கேட்பாயாகஇல்லறத்தை நீத்து துறவறத்தைப் பூண்டு பரதேசியாகிப்போதல் நேரும்சிறப்புடைய மடத்தில் மடாதிபதியாய்ப் பரம குருவாய்ஆதலும் நேரும்உண்மையான அறிவு வழி (ஞானம்நிலையில் நின்றுயோகநிலை கொண்டு நினைவில் சிவனை நிறுத்தி அவனடி மறவாதவனாகஇருப்பான்இதனையும் நீ காண்க என்று போகர் அருளால் புலிப்பாணிகூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்
வியாழ மகாதிசையில் சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 4மாதங்களாகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களானநலம் தரத்தக்கவகையில் திருமணம் நிகழ்தலும் சுப சோபனங்களும் உண்டாகும்பல்லக்கு,முத்தாபரணம்வெண்குடை ஆகியன விரைந்து வந்து சேரும்.பெருமையுடைய அரசர்களால் வெகுதனம் உண்டாகும்ஈன்ற தாய்தந்தை,மனைவி மக்களுடன் நிலைத்த புகழ் உடையவனாகி இவ்வுலகில்பெருமையுடன் வாழ்ந்திருப்பன் இச்சாதகன் எனப் போகர் அருளால்புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


வியாழன் மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

வியாழமகா திசையில் செவ்வாயின் பொசிப்புக்காலம் 11மாதம் 6நாட்களாகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவனபுண்களாலும்,அக்னியாலும் நோய் வந்தடையும்பூமியில் விளைச்சல் குறைந்துபோகும்.கன்றுகாலிகள் மரணமடையும் ஆகாயத்திலே பறந்து சென்றாலும்அங்கேயும் பகைவர் உளராவர்சிறைவாய்ப் படுதலும் அதனால்துன்புறுதலும் விதிவசமே என்று விதிவசமே என்று போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப்பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.



வியாழன் மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

வியாழமகாதிசையில் இராகு பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 4மாதம் 24 நாள்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனதேகநலத்தைக் கெடுக்கும்வியாதிகள் வந்துசேரும்மனைவிபுத்திரர் ஆகியோர்மரணமடைதலும் நேரும்பகைவரால் வெகுபயம் உண்டாகும்அவரால்இடைஞ்சல்கள் ஏற்படும்காரியக்கேடு ஏற்படும் என்று போகர் அருளால்புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

1 comment:

  1. If you're looking to burn fat then you have to try this totally brand new custom keto plan.

    To design this service, licensed nutritionists, fitness trainers, and top chefs have joined together to provide keto meal plans that are effective, decent, cost-efficient, and delightful.

    From their grand opening in January 2019, 1000's of clients have already completely transformed their body and health with the benefits a smart keto plan can offer.

    Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-proven ones given by the keto plan.

    ReplyDelete